அரசியல் களம் பிக்பாஸ் போன்றது அல்ல எனவும் அந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமலஹாசனுக்கு கிடைக்காது எனவும் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் அவர்கள் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 104வது பிறந்த நளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அதிமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் அவர்கள் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபர் டிடிவி தினகரன் தான் எனவும், வாடகை பாக்கி வைத்து இருந்த ரஜினிகாந் இனி என்னிடம் வாடகை கேட்காதீர்கள் நான் அரசியலுக்கு வரவில்லை எனக்கூறி சென்று விட்டதாகவும் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், பிக்பாஸில் பங்குபெற்ற ஷிவானி நாராயணன் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோருக்கு கிடைத்த ஓட்டுகள் கூட அரசியலில் கமலஹாசனுக்கு கிடைக்காது எனக் கூறியுள்ளார். ரம்யா பாண்டியன் பார்ப்பதற்கு நல்ல பெண்ணாக இருப்பதால் பிழைத்துப் போகட்டும் என நானே 5 ஓட்டுகள் போட்டேன் எனவும் அரசியல் களம் ஒன்றும் பிக்பாஸ் அல்ல மூன்று கோடி நான்கு கோடி விழுவதற்கு எனவும் கமலஹாசனை சீண்டி பேசியுள்ளார்.
கொரியா : கொரியாவின் குமியில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் இன்றைய தினம் இந்திய தடகள வீரர்கள் தங்கப்…
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர்…
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில்…
மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம்…
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…