விடுதியில் உல்லாசமாக இருக்க நினைத்த அரசியல் பிரமுகர்!வளைத்து பிடித்த காவல்துறையினர்!

Default Image

திருச்சி ஜங்‌ஷன் ராயல் ரோடு பகுதியில் ஒரு பிரபலமான விடுதி ஒன்று உள்ளது.அந்த விடுதியில் இரவு 10.30 மணிக்கு இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை அழைத்து கொண்டு வந்துள்ளார்.

அப்போது அங்கு மேனேஜராக பணிபுரியும் தமிழரசன் என்பவரிடம் நாங்கள் கணவன் மனைவி எங்களுக்கு தங்குவதற்கு ஒரு அறை வேண்டும் என்று கேட்டுள்ளார்.பின்னர் தமிழரசன் அவர்களுக்கு ஒரு அறை ஒதுக்கி கொடுத்துள்ளார்.

ஆனால் தமிழரசனுக்கு இருவரின் நடவடிக்கைகளை பார்த்ததும் சந்தேகம் வந்துள்ளது.அவர்களின் ஆடைகளை பார்த்ததும் கணவன் மனைவி மாதிரி தெரியாத காரணத்தால் சந்தேகம் உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக தமிழரசன் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் விசாரித்துள்ளனர்.பின்னர் அந்த இளைஞர் உண்மையை கூறியுள்ளார்.

அந்த இளைஞர் காவல்துறையினரிடம் விடுதியில் சந்தோசமாக இருக்க ஒரு பெண்ணை அழைத்து வந்ததாகவும் கணவன் மனைவி என்று கூறினால்தான் அறை கொடுப்பார்கள் என்ற காரணத்தால் அவ்வாறு சொன்னதாகவும் கூறியுள்ளார்.

மேலும் காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் சென்னை மண்ணயடியை சேர்ந்த நஜீம் என்றும் அவர் அரசியலில் பொறுப்புவகித்து வருபவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் மீது காவல்நிலையத்தில் நிறைய வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.பின்னர் அவரிடம் இருந்து அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் அவரை பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Mamata Banerjee Yogi Adityanath
Meenakshi Thirukalyanam
Nainar Nagendran - Mk Stalin
adam zampa ipl
weather update rain to heat
good bad ugly ajith ilayaraja