தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

Published by
Rebekal

தமிழகம் முழுவதிலும் இன்று 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இளம்பிள்ளை வாதம் நோய் வராமல் தடுப்பதற்காக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கால அளவில் கொடுக்கக்கூடிய போலியோ சொட்டு மருந்து வருடத்திற்கு இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றும் தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையம், பள்ளி மற்றும் முக்கியமான பேருந்து நிலையங்கள் விமான நிலையங்களிலும் கூட சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

காலை 7 மணி முதல் 5 மணி வரையிலும் சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் அனைத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் தகுந்த கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முகக் கவசம் அணிதல், கைகழுவுதல் ஆகியவற்றை கட்டாயமாக்கி கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருக்கும் பெரியவர்கள் தயவுசெய்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க கூடிய இடங்களுக்கு வரவேண்டாம் எனவும் குழந்தைகளை அழைத்து வரக் கூடிய பெற்றோர்கள் உரிய பாதுகாப்பு முறையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிக்காக 2 லட்சத்துக்கும் அதிகமான சுகாதாரப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்த படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 17 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கக்கூடிய சிறப்பான இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தான் தமிழகத்தில் போலியோ இல்லாத நிலை உருவாக்கியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago