#BREAKING : போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது – உயர்நீதிமன்ற மதுரை கிளை

Default Image

போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட  நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து  வருகின்றனர்.

இந்த நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தை இன்று விசாரித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. அப்பொழுது, ஜெயராஜ் – பென்னிக்ஸ் பிரேதப்பரிசோதனை அறிக்கை மூலம் அவர்களுக்கு மோசமான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது .சாத்தான்குளம் போலீஸ் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Sexual harassment
telangana tunnel collapse
Earthquake - BayofBengal
Pakistan vs Bangladesh 2025
tn govt