சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நேரடியாக விசாரணை நடத்திய நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அளித்த அறிக்கையில், காவல்நிலையில் தந்தை, மகனை விடிய விடிய காவல்துறை லத்தியால் அடித்துள்ளனர். இதனால் காவல்நிலையத்தில் உள்ள மேஜையிலும், லத்திலும் ரத்தக் கறை இருந்தது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. cctv hard disk-யில் இடவசதி இருந்தும், தினமும் பதிவுகள் தானாகவே அழியும் வகையில் செட்டிங்ஸ் (setting) மாற்றப்பட்டுள்ளது. மேலும், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சி தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியபோது, தந்தை – மகன் இருவரும் விடிய விடிய தாக்கப்பட்டதாகவும், இதனால் காவல்நிலையத்தில் உள்ள மேஜை மற்றும் லத்தியில் ரத்தக் கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார்.
அனைத்து காவலர்களும், லத்தியை ஒப்படைத்தபோது காவலர் மகாராஜன் லத்தியை ஒப்படைக்க மறுத்துவிட்டார். விசாரணையின் போது காவலர் மகாராஜன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வற்புறுத்திக் கேட்ட பிறகே லத்தியை ஒப்படைத்தார். தலைமைக் காவலர் ரேவதி வாக்குமூலம் அளிக்கும் போது மிகுந்த பயத்துடன் காணப்பட்டார்.
காவலர் ரேவதி வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது என அறிக்கையில் நடுவர் பாரதிதாசன் தெரிவித்துள்ளர்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…