மனைவி உட்பட மூன்றுபேரை வெட்டிய கணவர்…. போலீசார் தேடல்.!

Published by
பால முருகன்

சத்தியமங்கலத்தில் வசித்து வருபவர்கள் சாஸ்தா மூர்த்தி இவருடைய மனைவி அமுதா இவர்களுக்கு பவித்ரா என்ற 23 வயதுள்ள மகள் இருக்கிறார், இந்நிலையில் பவித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நகரை சேர்த்த, வீரமணிகண்டன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பு மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒன்றை வயது மற்றும் 9 மாதத்தில் ஒரு குழந்தைகள் உள்ளது, இந்நிலையில் கடந்த10 மாதங்களுக்கு முன்பு பவித்ரா கர்ப்பமாக இருந்தார், கர்ப்பமாக இருந

த பவித்ரா தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைபேறுக்காக சென்றார், மேலும் குழந்தை பிறக்கும் வரை அங்கேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் குழந்தை பிறப்பதற்கு முன் பவித்ரா வீரமணிகண்டன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்த தகராறு பவித்ராவின் தந்தை சாஸ்தா மூர்த்திக்கு தெரியவந்ததும் மருமகன் வீரமணிகண்டன் மற்றும் சாஸ்தா மூர்த்திக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, மேலும் இதில் ஆத்திரமடைந்த உடனடியாக அரிவாளால் எடுத்து வீரமணிகண்டன் தனது மாமனார் சாஸ்திர மூர்த்தியை அருவாளால் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் இதனையடுத்து சாஸ்தா மூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அளித்த புகாரின் பெயரில் வீரமணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், சிறையிலிருந்து வெளிவந்த வீரமணிகண்டன் நேற்றிரவு தனது மாமனார் வீடான சாஸ்தாமூர்த்தி வீட்டிற்கு தனது நபர்களுடன் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போது தனது மனைவி பவித்ரா இடையே வந்ததால் மனைவி என்று கூட பார்க்காமல் வீரமணிகண்டன் பவித்ராவை அருவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் தடுக்க வந்த மாமனார் சாஸ்தாமூர்த்தி மற்றும் மாமியார் அமுதா சாஸ்தா மூர்த்தியின் தாயார் சீத்தம்மாள் ஆகிய 3 பேரையும் வெட்டியதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இதில் பலத்த காயமடைந்த பவித்ரா சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் வீர மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago