முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் போலீஸ் விசாரணை…!

Default Image

புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட மணிகண்டனிடம் அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய சொன்னதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த புகார் அடிப்படையில்  மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால், மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனுக்கு, சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டதாக கூறி, புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மணிகண்டனை இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட மணிகண்டனிடம் அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், நடிகைக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் கோபாலபுரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk