சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் முருகனின் ஜாமீன் மனு 5- ஆம் முறையாக ஒத்திவைப்பு!

Default Image

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் முருகனின் ஜாமீன் மனு, 5 ஆம் முறையாக, செப். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முருகன், மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு, காவலர் முருகனின் ஜாமீன் மனுவை செப். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார். அவரின் ஜாமீன் மனு, 5 ஆம் முறையாக ஒத்திவைக்கப்படுவது, குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்