கோவை கார் வெடித்த விபத்து விசாரணையில் என்ஐஏ விசாரணை அதிகாரியாக தமிழக காவல் துறையில் இருந்து காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் .
கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்து சேதமான கார், மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு பல்வேறு தடயங்கள், 76கிலோ வேதிப்பொருட்கள் கிடைத்திருந்தது.
இதனை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, முபினுக்கு உதவியதாக அவருக்கு நெருக்கமான முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் என 6 பேரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனை அடுத்து, இந்த வழக்கு காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கொண்ட விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதில் தமிழக காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் விக்னேஷ் என்பவர் என்ஐஏவில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.அங்கு இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…