போலீசார் அதிரடி ..! துப்பாக்கி முனையில் ரவுடி சேதுபதி கைது ..!

Rowdy Arrest

சென்னை : தமிழகத்தில் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட . அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை தீவீரமாக கைது செய்து நடவடிவக்கை எடுத்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரவுடிகள் சுட்டுப் பிடிக்கப்படும் வருகின்றனர். மேலும், ஒரு சில ரவுடிகள் பயத்தில் சரணடைந்தும் வருகின்றனர். இந்நிலையில், சென்னை அருகே தலைமறைவாக இருந்து வந்த ரவுடியான சேதுபதியை துப்பாக்கி முனையில் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

தற்போது கைதாகி உள்ள இதை ரவுடி சேதுபதி மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 6 மாதங்களாக ரவுடி சேதுபதி போலீசாரிடமிருந்து தப்பி தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், சென்னை புழல் அருகே சூரபட்டு பகுதியில் ரவுடி சேதுபதி தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அங்கு சென்ற போலீசார் ரவுடி சேதுபதியை துப்பாக்கி முனையில் தற்போது கைது செய்துள்ளனர். சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் விசாரணையின் பொழுது தப்பிக்க முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்