#Breaking:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கிடுக்குப்பிடி…காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

Default Image

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது.தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறை தேடி வருகிறது.

இதனையடுத்து,பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறை நேற்று முன்தினம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில்,அவர் மீது மேலும் ஒரு பணமோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சாத்துரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் எஸ்.பிக்கு வந்த இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என காவல்துறை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி நிராகரிக்கப்பட்டு,பின்னர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில்,உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று கேவியட் மனு தாக்கல் செய்தது.

தங்கள் தரப்பை கேட்காமல் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்தது.

இந்நிலையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியுள்ளது.தலைமறைவாகி இருக்கும் ராஜேந்திர பாலாஜி பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழலில்,தற்போது அவரது வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
China chips
KKR VS LSG IPL 2025
Free bus for men - Minister Sivasankar says
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin