மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி மீது துப்பாக்கி சூடு.! போலீசை தாக்க முயன்றதால் பராபர்ப்பு.!

Default Image

மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி வினோத் என்பவர் காவல்துறையால் சுடப்பட்டார். 

மதுரையில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சார்பில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று , இரவு அதே போல காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது, மதுரை மாட்டுத்தாவணி அருகே, வினோத் என்பவரை காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

வினோத் மீது ஏற்கனவே 2 காவல் நிலையத்தில் பலவேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவரை மாட்டுத்தாவணி காவல் நிலையம் அழைத்து வர முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், வினோத் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் தாக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தான் காவத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காலில் காயம்பட்ட ரவுடி வினோத் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்