விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்த போலீசார்! இலங்கை விரையும் தனிப்படை போலீசார்!

Default Image

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய இலங்கை விரையும் தனிப்படை போலீசார்.

நடிகர் விஜய் சேதுபதி, பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரின் எதிர்ப்புக்கு மத்தியில், நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு, ட்வீட்டர் மூலமாக ரித்திக் என்பவர் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பல தாரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மிரட்டல் விடுத்த நபர் இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தனிப்படை போலீசார், அவரை கைது செய்ய விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்