திமுக ஆட்சி…ரவுடிகளை கண்டு அஞ்சும் காவல்துறை – ஓபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

Published by
Edison

தமிழ்நாட்டில் ரவுடிகளின் அட்டகாசம் கொடிகட்டி பறக்கிறது. இதனால்,ரவுடிகளை கண்டு காவல்துறை அஞ்சும் காலம் ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரவுடிகளை கண்டு காவல்துறை அஞ்சும் காலம் ஏற்பட்டுள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்று:

மேலும்,”நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ,நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ,அப்படித்தான் நல்ல ஆட்சியில் மக்களுக்கு நிம்மதி வேண்டும்” என்று நல்ல ஆட்சிக்கு விளக்கம் தந்திருக்கிறார் பேரறிஞர் அண்ணா.ஆனால் அதற்கு மாறான நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.அந்த வகையில்,காவல் துறையினரை கண்டு ரவுடிகள் அஞ்சிய காலம் மாறி,ரவுடிகளை கண்டு காவல் துறை அஞ்சும் நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

திமுக ஆட்சி – காவல்துறையினரே மிரட்டப்படும் நிகழ்வு:

குறிப்பாக,திமுக ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றதிலிருந்து பாலியல் வன்கொடுமைகளும்,கொலைகளும்,கொள்ளைகளும் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.அரசு அதிகாரிகளும், சிறு தொழிலதிபர்களும்,வியபாரிகளும்,இன்னும் சொல்லப்போனால், காவல்துறையினரே மிரட்டப்படும் நிகழ்வுகளும் ஆங்காங்கே அன்றாடம் நடைபெற்று வருகின்றன.

பாலியல் தொல்லை:

இதனிடையே,விருதுநகர் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பெண் தொழிலாளியை பாலியல் தொந்தரவு செய்ததில் உள்ளூர் திமுக வினருக்கு பங்கு இருக்கிறது.இதேபோன்று,மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தாயை இழந்த பள்ளி மாணவிக்கு கல்வி உதவி செய்வதாகக் கூறி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் திமுக பிரமுகர்.பின்னர் அந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில்,அந்த திமுக பிரமுகர் போக்சோவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இவ்வாறு,ரவுடிகளின் அட்டகாசம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. மொத்தத்தில் பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இதற்குக் காரணம் சமூக விரோதிகளின் பயமின்மை.எனவே,ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொன்டுள்ளார்.

Recent Posts

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

25 minutes ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

2 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

3 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

6 hours ago