#Breaking : காவலர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!

Default Image

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவிரைவாக பரவி வருகிறது.தொற்றைக்கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது அரசு அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைநகர் முழுவதும் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தல் கூடிய ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை சுற்றிக்கையாக அனுப்பி உள்ளார்.அந்த சுற்றறிக்கையில் காவர்கள்  விசாரணைக் காவலில் வைக்கப்படுவோரில் பலருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.எனவே பணியாற்றக்கூடிய  காவலர்கள்  மிக எச்சரிக்கையாக இருக்கவும், கைது செய்யபவர்களை  காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ய கூடாது என்றும் தடுப்பு காவல் மையங்களுக்கு அழைத்து சென்று தான் விசாரணை நடத்த வேண்டும். ஜாமீனில் வரும் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை உடனடி  ஜாமீனை காவலர்கள் தர வேண்டும். ஜாமீனில் வர முடியாத விசாரணை கைதிகளை மருத்துவ பரிசோதனை செய்வதுடன், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் மேலும் காவலர்கள் தங்களது சுகாதாரப் பாதுக்காப்பையும் உறுதி செய்யக் கொள்ளவும் அறிவுறுத்தி டிஜிபி  திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்