இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், ராச்சாண்டார் திருமலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேலாயுதம்பாளையம் தலைமைக் காவலர் திரு. ஜான்சன் வயது 42 ஈடுபட்டிருந்தார். பணியின் போதே அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த அலுவலர்கள் உடனே ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தனர். எனினும், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே தலைமைக் காவலர் ஜான்சன் உயிர் தியாகம் செய்தார். இதே போல், உள்ளாட்சி தேர்தல் பணியின் போது சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகதாஸ் மற்றும் அறிவுடை நம்பி ஆகியோரும் தங்களது உயிரை பணியின் போது தியாகம் செய்தனர். இந்த உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த மூன்று காவலர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைக் காவலர் ஜான்சன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகதாஸ் மற்றும் அறிவுடை நம்பி ஆகிய 3 காவலர்களின் குடுமபத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை முதலமைச்சரின் பொது நிவரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…