சுற்றுலா வந்தவர்களிடம் இருந்து ரூ.69,400 பறிமுதல்.. கதறி அழுத பஞ்சாபி பெண்!

Published by
பாலா கலியமூர்த்தி

Tourists: வடமாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினரிடம் 69,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு அதிக பணம் எடுத்து செல்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படுகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், நீலகிரி மாவட்டம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கணவர், மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் ஊட்டி செல்வதற்காக அந்த வழியே வாடகை கார் மூலம் வந்துள்ளனர்.

அந்த நேரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினர், அந்த காரை நிறுத்தி அவர்களிடம் இருந்த 69,400 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பஞ்சாபி பெண் எங்களிடம் செலவுக்கு கூட பணம் இல்லை, தயவு செய்து பறிமுதல் செய்த பணத்தை திருப்பி கொடுங்கள் என கதறி அழுதார்.

அவர் கூறியதாவது, நாங்கள் பஞ்சாப் மாநிலத்தில் விமானம் மூலம் கோவை வந்தோம். அங்கிருந்து வாடகை கார் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறோம். எங்களுக்கு இவ்வளவு பணம் எடுத்து வரக்கூடாது என்று தெரியாது. எங்களது பணத்தை திரும்ப கொடுத்து விடுங்கள் என இந்தியில் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

தேர்தல் காலங்களில் இதுபோன்ற பணத்தை எடுத்து வரக்கூடாது என்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நாளைக்குள் கிடைத்துவிடும் எனவும் பறக்கும் படையினர் பஞ்சாப் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். மேலும், சுற்றுலா வரும் பொதுமக்களிடம் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது என கோரிக்கையும் வைத்ததாக கூறப்படுகிறது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago