ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.! சென்னை புதிய கமிஷனர் அருண் அதிரடி.!

Published by
மணிகண்டன்

சென்னை: ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்போம். ரவுடிகளை ஒடுக்குவோம். – சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்.

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் இன்று முதல் பணியர்த்தப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று காலை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மாநகரின் காவல் ஆணையராக பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சென்னை காவல் பயிற்சித்துறை டிஜிபியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் அருண் ஐபிஎஸ் சென்னை மாநகரின் 110வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சட்டம் ஒழுங்கை காப்பாறுவதே எனது முதல் பணி என குறிப்பிட்டார்.

மேலும் கூறிய சென்னை ஆணையர் அருண், அனைத்து காவல்த்துறை அதிகாரிகளும் அவர்கள் பொறுப்பை உணர்ந்து, அவர்களது தினசரி பணிகளை செய்தாலே குற்றங்கள் குறையும் என கூறினார். அண்மையில் உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றி செய்தியாளர்கள் கேட்கையில், நான் இப்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். ஆம்ஸ்ட்ராங் வழக்கு பற்றி எனக்கு முழுதாக தெரியாது என கூறினார்.

அடுத்து, சென்னையில் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும் இதுவே முதல் பணி. அடுத்து ரவுடிகளை ஒடுக்கணும். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். அதனையும் சரி செய்ய வேண்டும். என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நல்ல பெயர் கிடைக்க செய்வேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவோம் என்று இன்றைய முதல் செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

29 minutes ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

31 minutes ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

1 hour ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

1 hour ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

3 hours ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

3 hours ago