புகைப்படத்தை பகிரும் போதும் மற்றவருடன் பேசும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும்-  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

Default Image

நாம் புகைப்படத்தை பகிரும் போதும் மற்றவருடன் பேசும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று சென்னை  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தற்போதைய சூழலில் நம்மிடையே இருப்பவர்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது என்பது வருத்தமளிக்கிறது. நம்பிக்கை வைப்பது தவறா என்ற நிலை தற்போது வந்துவிட்டது.

நேரில் பார்த்து பழகமால் யார் என்று தெரியாதவர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்கள் ஆகி அவர்களுடன் புகைப்படங்களை பகிர்ந்து கொள்கின்றனர். சமூக வளைத்தளங்கள் நல்ல விஷயம் அதனை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

நாம் புகைப்படத்தை பகிரும் போதும் மற்றவருடன் பேசும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். அதே போல ஏடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனைக்கான பாஸ்வேர்டுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்