சேலத்தில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் டவுன் பகுதியை சேர்ந்த அபுபக்கர், கோட்டை மாரியம்மன் கோவில் எதிரே பிஸ்கட் மற்றும் கேக் விற்பனை செய்து வருகிறார். கடந்த வாரம் அபுபக்கரின் கடைக்கு வந்த மூவர் பிஸ்கட் வாங்கிக் கொண்டு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளனர்.
அந்த நோட்டு கள்ளநோட்டு போல் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து அபுபக்கர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் அப்பகுதியிலுள்ள மற்ற கடைகளிலும் கள்ளநோட்டுகள் மாற்றப்பட்டிருந்தன.
இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரித்த சேலம் மாநகர போலீசார், சேலம் வீராணத்தை சேர்ந்த மணிவண்ணன், மன்னார்பாளையத்தைச் சேர்ந்த வளர்மதி, சங்கீதா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதேபோல் பல இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 12,500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கள்ள நோட்டை மாற்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நல்ல நோட்டுகள் 20 ஆயிரத்து 550 ரூபாயையும் பறிமுதல் செய்யப்பட்டது
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…