சேலத்தில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டவர்களை போலீஸ் கைதுசெய்தது ..!

Default Image

சேலத்தில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் டவுன் பகுதியை சேர்ந்த அபுபக்கர், கோட்டை மாரியம்மன் கோவில் எதிரே பிஸ்கட் மற்றும் கேக் விற்பனை செய்து வருகிறார். கடந்த வாரம் அபுபக்கரின் கடைக்கு வந்த மூவர் பிஸ்கட் வாங்கிக் கொண்டு, இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளனர்.

அந்த நோட்டு கள்ளநோட்டு போல் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து அபுபக்கர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் அப்பகுதியிலுள்ள மற்ற கடைகளிலும் கள்ளநோட்டுகள் மாற்றப்பட்டிருந்தன.

இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரித்த சேலம் மாநகர போலீசார், சேலம் வீராணத்தை சேர்ந்த மணிவண்ணன், மன்னார்பாளையத்தைச் சேர்ந்த வளர்மதி, சங்கீதா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதேபோல் பல இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 12,500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கள்ள நோட்டை மாற்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நல்ல நோட்டுகள் 20 ஆயிரத்து 550 ரூபாயையும் பறிமுதல் செய்யப்பட்டது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்