காவலர் தாக்கியதால் உயிரிழந்த குடிமகன் – காவலர் கைது!

Published by
Rebekal

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காவலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புக்கு காரணமான காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே சேலம் மாவட்டத்தி சேர்ந்த குடிமகன்கள் தர்மபுரிக்கு சென்று தங்களுக்கு தேவையான சாராயங்களை வாங்கி வந்து அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் முருகேசன் என்னும் நபர் தருமபுரிக்கு மது வாங்க சென்று விட்டு திரும்பிய போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முருகேசனை மடக்கி லத்தியால் அடித்துள்ளனர். இதனால் தலையின் பின்புறம் பலத்த காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தற்பொழுது முருகேசனின் உயிரிழப்புக்கு காரணமான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

6 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

7 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

7 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

9 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

10 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

10 hours ago