சமூக ஆர்வலர் முகிலனை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தற்போது மீண்டும் காவல்துறை கைது செய்துள்ளது. கரூரை சேர்ந்த பெண்மணி குடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கில் அரசுக்கு எதிராக முகிலன் அவர்கள் ஆதாரங்களை திரட்டிய நிலையில், கடந்த பிப்ரவரி மதம் முதல் காணாமல் போனார். சுமார் 140 நாட்களுக்கு பின்னர், நேற்று இரவு திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி காவல் துறையினர் காட்பாடி வழியாக சென்னை அழைத்து வந்தனர். சிபிசிஐடி காவல்துறையினர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துள்ள நிலையில், கரூர் மாவட்ட காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
முகிலன் அவர்கள் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி, கரூரை சேர்ந்த பெண் ஒருவர் குளித்தலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.பின்னர் முகிலனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…