திருச்சி மாவட்டதில் காவலர் தூக்கிட்டு தற்கொலை..! காரணம் என்ன..?

Default Image

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருப்பரைது காவல் நிலைய காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருப்பரைது பெரிய நகரில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன் இவரது மகன் ஆனந்த் 26 வயதான இவர் வாத்தலை காவல் நிலையதில் காவலராக பணியாற்றி வந்தார், இந்நிலையில் நேற்று இரவு தனது வேலையை முடித்து விட்டு ஆனந்த் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மேலும் அதற்கு பிறகு இரவு 11 மணிக்கு திடீரென தனது தயார் புடவையை எடுத்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார், இதனை பார்த்த ஆனந்த் தந்தை கோவிந்தராஜ் அதிர்ச்சியடைந்தார், பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், மேலும் ஆனந்த் எப்பொழுதும் ஆன்லைனில் ரம்மி விளையாடுவாராம், மேலும் இந்த ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்காக தனது நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார்.

மேலும் இந்நிலையில் வாங்கிய கடனை திரும்பி கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து கூறப்படுகிறது, மேலும் தொடர்பாக போலீசார் இந்த கடன் காரணமாக ஆனந்த் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்