கற்பை காக்க கத்தி குத்து – கொலை செய்த இளம்பெண்ணுக்கு விடுதலை என காவல்துறையினர் அறிவிப்பு!

Published by
Rebekal

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த இளைஞனை கத்தியால் குத்திவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த இளம்பெண் கவுதமிக்கு விடுதலை. 

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தில் 19 வயதான கவுதமி எனும் இளம்பெண்ணுக்கு அவரது உறவினர் அஜித்குமார் என்பவரால் இரவு நேரத்தில் வெளியில் சென்ற போது கத்தி முனையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதால், அஜித்குமாரின் கையிலிருந்த கத்தியை பறித்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கவுதமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தியதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் இரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

அதன் பின் காவல்நிலையத்தில் நடந்ததை கூறி கத்தியுடன் சரணடைந்தார் கவுதமி. இந்நிலையில், கவுதமி தனது உயிரை தற்காத்து கொள்வதற்காக இந்த கொலையை செய்ததால் அவரை கைது செய்யாமல் விடுதலை செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து கூறியுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்கள், 302 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை மாற்றி, இந்திய தண்டனை சட்டம் 100 தற்காப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து நீதிமன்றத்தில் தற்காப்புக்காக செய்யப்பட்ட கொலை என்பதால் இந்திய தண்டனை சட்டம் 100 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இளம்பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

7 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

7 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

9 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

9 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

9 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

10 hours ago