முதல்வர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆலோசனை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரையில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ள சாராயம் அருந்திய 34 பேர் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
மேலும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில், அமைச்சர்கள் பொன்முடி, வேலு, செஞ்சி மஸ்தான், டிஜிபி சைலேந்திரபாபு, விழுப்புரம் ஆட்சியர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், ஆட்சியர்கள் எஸ்.பி.க்கள் ஆகியோருடனும் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…
தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…