திருப்பத்தூர் வனப்பகுதியில் மலைப்பாம்பு பிடியில் சிக்கி உயிரிழந்த புள்ளிமான்!

Default Image

திருப்பத்தூர் வன பகுதியில் உள்ள புள்ளி மான் ஒன்று மலைப்பாம்பு பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி பைரவர் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் மற்றும் மலைப் பாம்புகள் போன்ற பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், மலைப்பாம்பு ஒன்று ஒரு புள்ளி மான் குட்டியை  பிடித்து விழுங்க முயற்சித்துள்ளது.

அதை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், புள்ளிமானை மலை பாம்பிடம் இருந்து மீட்டனர். உடனடியாக புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டு சென்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்