“கவிஞர் பிறைசூடனின் பாடல்கள் மறையாது” -ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி..!

Published by
Edison

கவிஞர் பிறைசூடனின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (65 வயது) உடல்நல குறைவால் சென்னையில் நேற்று காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

இதனையடுத்து,தமிழக முதல்வர் ஸ்டாலின்,திரைத்துறையினர் மற்றும் மக்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.இதனையடுத்து,இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில்,கவிஞர் பிறைசூடனின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“தன் புலமையை மறைத்துக்கொண்டு கொடுக்கப்படும் சூழல்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் ஏற்றபடி எழுதும் பாவலர் பிறைசூடன். இப்போது தன் பாட்டை விரும்பிக் கேட்பவர்களிடமிருந்து தன்னையே மறைத்துக்கொண்டுள்ளார். அவர் பாடல்கள் மறையா. அஞ்சலிகள்”,என்று பதிவிட்டுள்ளார்.

கவிஞர் பிறைசூடனின் படைப்பு:

தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார். செம்பருத்தி திரைப்படத்தில் நடந்தால் இரண்டடி என்ற புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் இவரே.

1985ல் வெளியான சிறை படத்தில் இடம்பெற்ற ராசாத்தி ரோசாப்பூ பாடல் மூலம் அறிமுகமானார். மேலும் பணக்காரன் திரைப்படத்தில் பிறைசூடன் எழுதிய நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

3 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

4 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

5 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

6 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

7 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

8 hours ago