#BREAKING: பாமக வேட்பாளர் மாற்றம்.., ஜி.கே மணி அறிவிப்பு..!

Default Image

பாட்டாளி மக்கள் கட்சி கீழ்வேளூர் தனி தொகுதிக்கு புதிய வேட்பாளரை அறிவித்துள்ளது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சியினர் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு அனைத்தும் முடிந்து தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்பதால் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ள வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், அனைத்து கட்சியினர் சில தொகுதிகளில் வேட்பாளர் மாற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில்,பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், நாகப்பட்டினம் மாவட்டம் 164, கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு.வேத.முகுந்தன் அவர்கள் மாற்றப்படுகிறார்.

அவருக்குப் பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வடிவேல் இராவணன் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடுவார் என்பதை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்