பிரதமர் மோடி கோரிக்கை !விளக்குகளை மட்டும் தான் அணைக்க வேண்டும் – மின்சாரவாரியம்

Default Image

நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் ,ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.

வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் மின்சாரம் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.அதாவது,நாளை இரவு அனைத்து செயற்பொறியாளர்கள்  பணியில் இருக்க வேண்டும் என்றும் சரியாக 9 மணிக்கு மின்சாரம் சரியான அளவில் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நாளை இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை வீட்டின் மின் விளக்குகளை மட்டும்  அணைக்க வேண்டும் என்றும்  இதர மின்சாதனங்களை அணைக்க வேண்டாம் என்றும் மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. அனைத்து மின்சாதனங்களையும் ஒரே நேரத்தில் அணைத்துவிட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சாரப் பிரச்சனை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது..தமிழகம் முழுவதும் விளக்குகள் அணைக்கும்பொழுது தோராயமாக 1000 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் குறைய வாய்ப்பு உள்ளது என்று மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
nitish kumar national anthem
Encounter - TnPolice
csk ms dhoni
ADMK
GoodBadUgly