கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில் இன்று இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார்.நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றிய நிலையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025