PM Modi - Kanniyakumari Vivekananda Mandapam [File image]
கன்னியகுமாரி: தேர்தல் பிரச்சாரம் முடிந்ததை அடுத்து, 3 நாட்கள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தனது தியானத்தை தொடங்கினார்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட , நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவுபெற்றுவிட்டன. இதனை அடுத்து, இன்று முதல் ஜூன் 1 வரையில் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். உ.பி வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வந்திறங்கிய மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார்.
கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் சற்று நேரம் ஓய்வெடுத்த பிரதமர் மோடி, அங்கிருந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். அங்கு பகவதி அம்மனை தரிசித்த பிரதமர் மோடிக்கு பகவதி அம்மன் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதன், பின்னர், பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள சிறப்பு படகு மூலம் விவேகானந்தர் மண்டபம் புறப்பட்டார்.
விவேகானந்தர் பாறைக்கு சிறப்பு படகு மூலம் சென்றடைந்த பிரதமர் மோடி பின்னர், அங்கு தனது தியானத்தை தொடங்கினார். இன்று ஆரம்பிக்கும் தியானத்தை ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் மோடி நிறைவு செய்வார் என கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு நகர் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…