பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

Published by
மணிகண்டன்

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. – தமிழிசை பேட்டி.

புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் மறந்து இருந்த பழைய நினைவுகளை புது திட்டங்கள் மூலம் அதனை செய்லபடுத்தி உள்ளார் பிரதமர் மோடி என பேசினார்.

அவர் கூறுகையில், நாம் அனைவரும் , ரயிலை விட விமானத்தில் சென்றால் தான் வேகமாக ஒரு இடத்திற்கு செல்ல முடியும் என நினைத்து இருந்தோம். அதனை தவிர்த்து ரயிலிலும் வேகமாக செல்ல முடியும் என வந்தே பாரத் ரயிலை கொண்டு வந்தார் பிரதமர் மோடி.

அடுத்து மக்கள் மறந்து இருந்த ரேடியோவை நினைவூட்ட மனதின் குரல் எனும் நிகழ்ச்சி கொண்டு வந்து அதன் மூலம் மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. மக்கள் மறந்து இருந்த தபால் நிலையத்திற்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் கொண்டு வந்து, அதன் மூலம் மீண்டும் மக்களை தபால் நிலையம் கொண்டு வந்தார் பிரதமர் மோடி என கூறி, இப்படி பிரதமர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் இருக்கிறது என்றும் இதனை விடுத்து எதிர்க்கட்சிகள், பிரதமர் பிரிவினைவாதம் பேசுவதாக பொய் குற்றம் சாட்டை முன்வைத்து வருகின்றனர் என தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் 100 நாளில் 25 நாட்கள் இளைஞர்களுக்ககால நான் முழுக்க உழைப்பேன் என பிரதமர் மோடி கூறுகிறார். 4 கட்ட தேர்தலில் ஏற்கனவே எங்களுக்கு (பாஜக) பெரும்பான்மை வந்துவிட்டது . இனி எல்லாம் போனஸ் தான் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

5 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

12 mins ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

31 mins ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

60 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

1 hour ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

1 hour ago