மதுரைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி!!மதுரையில் உச்சக்கட்ட பாதுகாப்பு!!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வந்தடைந்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது தென் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சியால் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதற்காக ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 750 படுக்கை வசதிகள், 100 மருத்துவ படிப்பிற்கான இடங்களும் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.

விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.அடிக்கல்நாட்டு விழாவையடுத்து பாஜகவின் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் டிஜிபி ராஜேந்திரன் தலைமையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு, 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்