pm modi arrived chennai [file image]
2024 கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். 3 நாள் அரசு முறை பயணமாக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பெங்களுருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகை தந்துள்ளார். தமிழம் வந்துள்ள பிரதமர் மோடியை, அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, ஐ.பெரியசாமி, எவே வேலு ஆகியோர் வரவேற்றனர்.
திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பாஜகவின் முக்கிய தலைவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர்களும் வரவேற்றனர்.
கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ…
இதன்பின் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு மைதானத்துக்கு செல்கிறார் பிரதமர் மோடி.
எனவே, சற்று நேரத்தில் நேரு விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார் பிரதமர் மோடி. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 5,630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் இன்று முதல் ஜன. 31ம் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…