#BREAKING: பிளஸ் டூ பொதுத்தேர்வு.., அமைச்சர் ஆலோசனை..!

Default Image

+2 பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நூலகத் துறை இயக்குனர், முறைசாரா கல்வி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். தேர்வு எப்போது நடத்துவது முக்கிய பாடங்களுக்கு மட்டும் நடத்துவதா..? என்று மத்திய அரசு விளக்கம் கேட்டிருந்தது.  மத்திய அரசு விளக்கம் கேட்டு இருந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனைக்கு பிறகு பிளஸ் டூ தேர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு +2 பொதுத் தேர்வு நடத்துவது  தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழகம் சார்பில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனைக்கு பின்னர்செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும்,தமிழகத்தில் கண்டிப்பாக +2 பொதுத் தேர்வு நடைபெறும் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY
V. C. Chandhirakumar
Parvesh verma - Arvind Kejriwal
Arvind Kejriwal - Atishi