சென்னை : தமிழகத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்க்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதியும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியானது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்பொழுது, துணைத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஜூலை 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான விரிவான விளக்கம் பின்வருமாறு…
ஜூன் 24 – மொழிப்பாடம், ஜூன் 25- ஆங்கிலம், ஜூன் 26- ஜூன் 27- வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், ஜூன் 27- கணினி அறிவியல், புள்ளிவிவரங்கள், உயிர் வேதியியல், ஜூன் 28- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், ஜூன் 29 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் ஜூலை-1 கணிதம், விலங்கியல், வர்த்தகம் , வர்த்தகம், மைக்ரோ உயிரியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.
ஜூலை 2- மொழிப்பாடம், ஜூலை 3 ஆங்கிலம், ஜூலை 4- இயற்பியல், பொருளாதாரம், ஜூலை 5- கணினி, ஜூலை 6- தாவரவியல், வரலாறு, ஜூலை 8- கணிதம், வணிகவியல் ஜூலை 9- வேதியியல், கணக்கியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…
சென்னை -நவராத்திரி நான்காம் நாளின் நெய்வேத்தியமான கதம்ப சாதம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து…
சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு…
சென்னை : அடுத்த ஆண்டில் நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் விதிமுறைகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. இந்த மெகா…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை பெரிய அளவில் பேசுபொருளாகி தற்போது மெல்ல மெல்லக்…
சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…