தமிழகத்தில் அரசு விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் தயாரித்த 3,000 தொழிற்சாலைகள் மூடல் அமைச்சர் மெய்யநாதன் தகவல்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டார்.
இதன்பின் செய்தியாள்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் 15 நபர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3.98 கோடி காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் ரூ.2 கோடி பரிசளித்திருக்கிறார் என்றார்.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்தபட்சம் 75 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் அடுத்த ஆண்டிற்குள் பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்யப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அரசு விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் தயாரித்த 3,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டன என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…