பிளாஸ்மா வங்கி இன்னும் ஓரிரு நாட்களில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி இன்னும் ஓரிரு நாட்களில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்  அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று திருநெல்வேலியில்   நடைபெற்றது.இதன் பின்னர் அவர் பேசுகையில்,தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி இன்னும் ஓரிரு நாட்களில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.உயிரிழப்புகளை தடுப்பதற்கான உயர்தர மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளது.

பொதுமக்கள் இந்த தருணத்தில் சுய மருத்துவம் செய்துகொள்ள வேண்டாம்.இ-சஞ்சீவனி வாயிலாக காணொலி மூலம் மருத்துவ ஆலோசனைகளை அரசு வழங்கி வருகிறது ன்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்