மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் இல்லை என டிடிவி தினகரன் ட்வீட்.
சென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் இல்லை. பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் ஏறத்தாழ 3,500 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் அளிக்கும் பழமை வாய்ந்த கம்பன் கால்வாயில் 7 கிலோ மீட்டர் தூரம் அழிக்கப்படுவதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
விமான நிலையம் போன்ற வளர்ச்சித் திட்டம் தேவைதான் என்றாலும், அது நமக்கு சோறுபோடும் விவசாயத்தை அழித்து கொண்டுவரக்கூடியதாக இருக்கக்கூடாது. இதே போன்ற பிரச்னை கோவை மாவட்டம் அன்னூரில்(TIDCO) ஏற்பட்டபோது, விளைநிலங்களை கையகப்படுத்தப்போவதில்லை எனத் தமிழக அரசு அண்மையில் உறுதியளித்திருக்கிறது. பரந்தூர் பகுதிக்கு மட்டும் அந்த உறுதிமொழி பொருந்தாதா என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…