நாளை மறுநாள் 12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவகளை வெளியிட திட்டம்.!

Default Image

12ம் வகுப்பு மறுதேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிட தேர்வுத்துறை திட்டம்.

பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் வெளியானது. தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு நேற்று திங்கட்கிழமை மறுதேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

இதற்கிடையில் நேற்று நடந்த 12 ஆம் வகுப்பு மறுதேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று நடந்து வரும் நிலையில் வருகின்ற வியாழக்கிழமை தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்