சென்னையில் 144 இடங்களில் ரூ.120 கோடி செலவில் மழைநீர் வடிகால்கள் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் உத்தரவு.
சென்னையில் மழைநீர் தேங்கிய 144 இடங்களில் ரூ.120 கோடி செலவில் 45 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்டு முதல் கட்டமாக 144 இடங்களில் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
45 கி.மீ. நீளத்துக்கு பணிகளை மேற்கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும் விடுபட்ட மழைநீர் வடிகால்களை இணைக்கவும், பழுந்தடைந்த மழைநீர் வடிகால்களை புதுப்பிக்கவும் திட்டமிட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…