கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் அமைக்க திட்டம் – முதலமைச்சர் பழனிசாமி

Default Image

கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து முதலமைச்சர் பழனிசாமி வைத்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.சுத்திகரிக்கப்பட்ட நீர் 9 நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
விரைவில் சென்னை பெருங்குடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.சென்னைக்கு குழாய் மூலம் கிருஷ்ணா நதிநீரை கொண்டுவர அரசு பரிசீலனை செய்து வருகிறது .சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கோதாவரி – காவேரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. இந்த இணைப்பு திட்டத்திற்கு மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை  என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
ADMK
GoodBadUgly
digital scams old women
DMK MPs protest at Delhi Parliament
cm mk stalin
impact player rule in ipl