பியூஸ் மனுஷ் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்..!

Default Image

சேலத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ்.நேற்று சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அவரிடம் சில கேள்விகளை கேட்டார். அப்போது பியூஸ் மனுஷ் ஃபேஸ்புக் லைவ் வீடியோ போட்டு இருந்தார். அப்போது இருதரப்பினருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பியூஸ்  மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்து காவல்துறை பியூஸ் மனுஷ் மீட்டு அழைத்து சென்றனர்.இந்த தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கட்டணம் தெரிவித்து உள்ளார்.

தனது ட்விட்டரில் தாக்குதல் குறித்து ஸ்டாலின் பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே பியூஸ் மனுஷ் மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளது.ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை அறவழியில் வேரறுப்போம்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்