மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனை விருந்தினர் மாளிகையில் சந்தித்து நலம் விசாரித்தார் .
சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 11.55 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் வழக்கமாக செய்துகொள்ளும் சோதனைகள்தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் அவருக்கு இன்று மதியம் மருத்துவமனையில் சிகிச்சைகள் எடுத்து முடிக்கப்பட்டவுடன் அவர் கேரள விருந்தினர் மாளிகைக்கு திரும்பினார். அங்கு அவரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
செவாலியே விருது பெற்ற கமலுக்கு, பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் கமல் கட்சி தொடங்கியபோதும் நேரில் வர இயலாததை கூறி முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். கேரள முதல்வருடன் கமலுக்கு நல்ல பழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…