தமிழகம் முழுவதும் இன்று பெட்ரோல் பங்க்குகள் இயங்காது

Default Image

தமிழகம் முழுவதும் இன்று  பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனிடயே  ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது.

எனவே  ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்  நள்ளிரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை  பெட்ரோல் பங்க் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5,12,19,26 ஆகிய தேதிகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என்றும் நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே  பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்