10-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவித்தார். அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார்.
இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன்சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் , கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாதிப்பு என்றும், தேர்வு மையம் வருவதற்கான உரிய போக்குவரத்து வசதி செய்யாத நிலையில் தேர்வு நடத்தப்படக் கூடாது என தெரிவித்து இருந்தார்.
ஆசிரியர் சங்க சார்பில் தாக்கல் செய்த மனு இந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்..? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா மனுவை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…