நாளை முதல் ஏப்ரல் 5 வரை கூகுள் பேவுக்கு தடை கோரி புகார் மனு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் பறக்கு படையினரும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மக்களுக்கு நேரடியாக பணம் தராமல் பணப் பரிமாற்ற செயலிகளான கூகிள் பே, போன் பே போன்றவை மூலம் பணம் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ராம சுப்பிரமணியன் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன் பணப் பரிமாற்ற செயலிகளான கூகிள் பே, போன் பே செயலிகள் மூலம் பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க வேண்டும். மேலும், நாளை முதல் 5 தேதி வரை பணபரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…