#Breaking : காலை – மாலை குப்பை லாரிகளை இயக்க தடை.! உயர்நீதிமன்றத்தில் மனு.!

Default Image

பள்ளி மற்றும் அலுவலக நேரத்தில் காலை மற்றும் மாலையில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

காலை பள்ளி அலுவலக நேரத்திலும், மாலையில் அதே போல நேரத்திலும் சென்னையில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை குறித்து ஆனந்த் என்பவர் அந்த மனுவை சென்னை உய்ரநீதிமன்றத்தில் அளித்துள்ளார். இதனால், பள்ளி மற்றும் அலுவலக நேரத்தில் காலை மற்றும் மாலையில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் எனவும்,

வெளிநாடுகளில் இருப்பது போல இரவு நேரங்களில் மட்டும் குப்பை லாரிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்