தமிழகத்தில் 8 ஆண்டுகளாக சிறுமிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் அருள் முறையீடு செய்துள்ளார். அதில், தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. வன்கொடுமை சம்பவங்கள் குறித்து நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் முறையாக அமல்படுத்தபடுகிறதா..? என்பது கேள்வி குறியாக உள்ளது.
போக்சோ சட்டம் முறையாக நடைமுறைப்படுத்ததன் காரணமாகவே தமிழகத்தில் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது, எனவே நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…